குறுந்தொகையில் தலைவன் - தலைவி - தோழி
உறவு நிலைச் சித்திரிப்பு
முனைவர் சீ.காயத்ரி தேவி,
உதவிப் பேராசிரியை,தமிழ்த்துறை,
மன்னர் திருமலை
நாயக்கர் கல்லூரி,பசுமலை, மதுரை
- 4.
முகவுரை
:
சங்க
இலக்கியத்துள் அகமன உணர்வை, தலைவன்
- தலைவி எனும் பொதுச் சொல்லால்
அமைத்து பெரிதும் வெளிப்படுத்துவது குறுகிய அடிகளாலான குறுந்தொகையே
ஆகும். ஒத்த அன்பினால் தம்
அகமன உணர்வால் ஒன்றிணைந்த தலைவன் - தலைவி தம் காதலில்
வெற்றி கொண்டு கணவன் - மனைவியாக
வலம்வரும் வெற்றியின் பின்புலத்தில் தோழியின் பங்கு மிகவும் பாராட்டுதற்குரியதாகும்.
அவ்வகையில், குறுந்தொகையில் தலைவன் - தலைவி - தோழி உறவுச்
சித்திரிப்பு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
தலைவி
– தோழி நட்புணர்வு :
தலைவனை
விரும்பிய தலைவியின் காதல் வெற்றி பெறுவதற்குப்
பெரிதும் துணை நிற்பவள் தோழி.
தலைவி மீது தான் வைத்திருக்கும்
உயரிய நட்புணர்வால் தலைவன் - தலைவி இருவரையும் திருமணத்தில்
ஒன்றிணைப்பது தன் கடமையென்றே செயல்படுகிறாள்
தோழி. தலைவி தன் உள்ளத்தில்
உள்ள தலைவனைப் பற்றி தோழியிடம் கூறுவதன்
மூலம் தன் கவலை நீங்கித்
தலைவனோடு கற்பின் உயிர் நிலையில்
இல்லற வாழ்வை அடைகிறாள்.
‘யானுமோர் ஆடுகள மகளே என்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகளே!”- குறுந்.
31
என்ற அடிகளின் மூலம், தலைவனோடு களவு
மணம் புணர்ந்த தலைவி, அதனை வேறு
யாரிடத்தும் கூறாது தோழியிடத்துக் கூறுவதை
அறிகிறோம். தான் தலைவனோடு வைத்திருக்கும்
அன்பை உரியவர்களிடம் உரிய முறையில் எடுத்துரைக்கும்
பாங்கு தோழியால் மட்டுமே முடியும் என்று
தலைவி நம்புவதையும் இதன் மூலம் உணர
முடிகிறது. ஆக,தோழியானவள் தலைவன்
- தலைவி ஆகிய இருவருக்கும் பாலமாகத்
திகழ்வதைக் காணலாம்.
தலைவியைத்
தோழி இடித்துரைத்தல் :